Pages

Tuesday, March 30, 2010

பொய் முகம்

ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமான
பொய் முகங்கள்
மெய் பேசும்...................

பொய்யான முகங்கள்
செய்கின்ற நன்மை
எண்ணிலடங்காது..............

என்னை எனக்குக்
காட்டும்
தன்னை எனக்குக்
காட்டும்
விண்ணைத் தொட
எண்ணி
மண்ணைத் தொட்ட
பொய் முகங்களை
எனக்குப் பிடிக்கும்............

அதிர்ந்து போவேன் சில பொழுது
அறைந்து பேசும் தருணங்களில்
பதிவு செய்த
பதிவுகளை
மீண்டும் , மீண்டும்
நினைக்கையிலே
கற்ற பாடம் பலவாகும்
பெற்ற அனுபவம் புதிதாகும்.

நம்மை பற்றி நம்மிடமே
நா கூசமல் பேசும்
பொய் முகம்
நன்மை கொஞ்சம் நக்கல்
கொஞ்சம் அதில் மிஞ்சும்
தன்மையின்றி பேசிய பின்னர்
உண்மை சொன்னேன் என்று
உர(ரை)த்துச் செ(சொ)ல்லும்
உலகம் தலைகீழாய்
நம்மை தள்ளும்!

பொய் முகம்
கண்டு, கண்டு
மெய்யான முகமறிய
தவறினேன்
செய்யாத தவமெல்லாம்
பொய்யாகி போக
மெய் காண வேண்டி
போகிறேன்.

No comments:

Post a Comment