
குற்றம் செய்த போது தானே
சுற்றம் வந்தது - என்
குற்றம் எல்லாம்
இடித்துரைத்து
பட்டம் தந்தது
ஓடிப்போனவள் என்று
பட்டம் தந்தது
எண்ணமெல்லாம் வார்த்தையாகி
நெஞ்சில் நின்றது - இந்த
சொந்தமெல்லாம்
பந்தம் கொள்ள
உறவு வந்தது -நல்
வரவு சொன்னது
வாழ்ந்து விட்டால்
வீழ்ந்து போக உறவுகள்
சூழ்ந்து கொள்ளுமே
சூழ்ச்சி செய்து சூது பல
சொல்லி மகிழுமே - எம்மை
எள்ளி மகிழுமே
திருந்தி வந்தேன்
திரும்பி வந்தேன் - தினம்
வரிந்தி அழுதேன்
உறுதி எல்லாம்
சிதறி போக
பயணம் போகிறேன் - இறுதிப்
பயணம் போகிறேன்.
No comments:
Post a Comment