Pages

Tuesday, October 19, 2010

தமிழ்ப் பள்ளி

வேலையே செய்யாது- எந்த
சேவையும் ஆற்றாது
தேவை ஏற்பட்டால்
காலையும் வாரிவிடும்
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் - பல
தெய்வம் இதை போற்றும்.....

ஊமையாய் பல வேசம்
உண்மையேயில்லாத நேசம்
உருவாக்கப் பணியில்
ஊனப்பட்ட பிணிகள்...
தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் - பல
தெய்வம் இதை போற்றும்.....

வேலை கொடுத்தால் பல குறைகள்
வெட்டி முறித்ததாய் தினம் உரைகள்
தலைவனை மயக்கும் சாகசங்கள்
தலைவிரி கோலமாய் சில முகங்கள்.....

பணியைச் செய்பவருக்கே பணியென
பணித்திடும் தலைவனிடத்தில் ஒரு கேள்வி
சுமையைச் சுமப்பவரே சுமைதாங்கியானால்
சோம்பேறிக்குச் சம்பளம் கொடுப்பதேன்????????????????

No comments:

Post a Comment