
உனது
தீர்க்கமான பார்வை
எனக்குள்
தீராத வலியாய்
தீயாய் சுடுகிறது....
உனது
நீண்ட நேர
கனமான மெளனம்
இதயத்தில் இடியாய்
இறங்கி உடைக்கிறது....
உனது
அன்பான ஆதரவான
பார்வை
அலையாய் எழுந்து
புயலாய் வீசுகிறது....
காதல் என்று
சொல்ல வந்த தருணமெல்லாம்
தள்ளி நின்று
தள்ளி சென்று
என் தவிப்பை
தகிக்க வைக்கிறாய்...
நீ என்னை
அழுத்தமாய் பார்த்து
அமைதியாய் நகைப்பாய்
இதழோரம் தவளும்
இனிதான நகைப்பில்- என்
இரவெல்லாம் விழித்து
என்னை கொல்லும்...
சொல்ல வந்ததை
சொல்லவும் முடியாமல்..
சொல்லி விடவும் இயலாமல்...
நரக வேதனையில் நான்
சொல்ல நினைப்பதை
சொல்ல மறுத்து
காதல் இல்லை என மறைத்து
நிதம் தொல்லை செய்யும் நீ
கண்ணில் தெரியும் காதலை
மண்ணில் புதைக்க நீயும்
கையில் வைத்த இதயத்தை
பொய்யில் மறைக்கும் நானுமாய்
நாம் மெளனத்தில் நிறைகிறோம்..........
No comments:
Post a Comment