Pages

Wednesday, June 9, 2010


காதலை எழுத எனக்கு சொற்கள் இல்லை

கண்ணாதாசனிடம் சண்டையிட்டு

கம்பனிடன் கடன் கேட்டு

வாலியிடம் பிச்சையெடுத்து

வைரமுத்துவிடம் யாசித்து

தாமரையிடம் திருடி எழுத பார்க்கிறேன்........................


காதல் ஒரு நெருப்பு

பார்க்க அழகாக இருக்கிறதே என்று

எடுத்து சாப்பிட முடியாத

தொடவும் முடியாது

ஆனால் அது நம்மை தொடரும்.........


அது சுகமானது என்று

நினைக்கும் மறுகணமே துயரானதும்

கூடநிறைவேறினாலும் தோற்றாலும்

வலிகள் நிரந்தரமானது!


காதல் கண்ணாமூச்சு

ஒளிந்து கொள்ளும்

தேடும் தேடி களைத்து

கண்டுபிடித்து நம்மை

களைத்து போடும்!


கடந்த காதலை கண்டு வாழாலாம்

நிறைந்த காதலை நினைத்து வாழலாம்

துறந்த காதலை மறக்காமல் வாழலாம்!


கண்ணீர் காதல்

காலம் கடந்த காதல்

கைகூடிய காதல்

கரைந்த காதல்

எதுவானாலும்காதல்

வெற்றி சுகமானதா

என்று தெரியாது! ஆனால்

காதல் தோல்வி துயரானது

என்று தெரியும், புரியும், அறியும்!