விடாமல் பெய்யும் அடை மழையாய் எண்ணமும்
சொட்டு சொட்டாய் பெய்யும் தூறாலாய் நினைவும்
பட்டும் படாமலும் கொட்டும் பனித்துளியை ஞாபங்கங்களும்
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றலாய் நானும்
விட்டு விட்டு தூரம் போகும் நிழலாய் நீயும்
சுட்டு சுட்டு போட்டலும் உயிர்க்கும் நட்பாய் நாமும்
திட்டு திட்டாய் கொட்டி வைத்த தீவாய் இருப்போம்.
நட்டு நட்டு நட்பு செடியை வளர்ப்போம்.
Friday, April 2, 2010
படிக்கும் தருணம்
படித்துப் படித்தே
மடிந்து போக
தருணமொன்று வாய்க்காதா?
மடிந்த பின்னும்
நம்மை படிக்க
இதயமொன்று வேண்டாமா?
கலைந்த கனவு,
இழந்த வாழ்வு,
தொலைத்த நிமிடம்,
என்று எண்ணியெண்ணி
ஏங்கிக் கிடக்கையில்
படித்தப் புத்தக
எண்ணிக்கை
எள்ளி நகையாடுகிறது என்னை!
பேச, நகைக்க, பார்க்க
நேரம் இருந்தது,
படிக்க வந்த போது மட்டும்
நேரம் இறந்தது!
படித்த உடனே
மறந்த புத்தகம்,
படித்துப் படித்துச்
சுவைத்தப் புத்தகம்,
படிக்க நினைத்து
வைத்தப் புத்தகம்
படித்தப் பின் இதயம் வெடித்து
அழுத புத்தகம்
படித்து விட்டு தலையில் அடித்து
கிழித்தப் புத்தகம்
இத்தனை புத்தகம்
கற்ற போதும்
கல்லாத புத்தக
வரிசை நீண்டு
கொண்டே போகிறது!
படிக்க வேண்டுமென்று
துடிக்கத் துடிக்க பேசிய
வார்த்தையெல்லாம்
செவியில் வந்து நின்று
பாடாய் படுத்துகிறது!
ஆயுள் குறையும் முன்னே
ஆன்மா பிரியும் முன்னே
இவற்றைப் படிக்கும்
தருணம் வாய்க்காதா?
மடிந்து போக
தருணமொன்று வாய்க்காதா?
மடிந்த பின்னும்
நம்மை படிக்க
இதயமொன்று வேண்டாமா?
கலைந்த கனவு,
இழந்த வாழ்வு,
தொலைத்த நிமிடம்,
என்று எண்ணியெண்ணி
ஏங்கிக் கிடக்கையில்
படித்தப் புத்தக
எண்ணிக்கை
எள்ளி நகையாடுகிறது என்னை!
பேச, நகைக்க, பார்க்க
நேரம் இருந்தது,
படிக்க வந்த போது மட்டும்
நேரம் இறந்தது!
படித்த உடனே
மறந்த புத்தகம்,
படித்துப் படித்துச்
சுவைத்தப் புத்தகம்,
படிக்க நினைத்து
வைத்தப் புத்தகம்
படித்தப் பின் இதயம் வெடித்து
அழுத புத்தகம்
படித்து விட்டு தலையில் அடித்து
கிழித்தப் புத்தகம்
இத்தனை புத்தகம்
கற்ற போதும்
கல்லாத புத்தக
வரிசை நீண்டு
கொண்டே போகிறது!
படிக்க வேண்டுமென்று
துடிக்கத் துடிக்க பேசிய
வார்த்தையெல்லாம்
செவியில் வந்து நின்று
பாடாய் படுத்துகிறது!
ஆயுள் குறையும் முன்னே
ஆன்மா பிரியும் முன்னே
இவற்றைப் படிக்கும்
தருணம் வாய்க்காதா?
Thursday, April 1, 2010
அன்புக்குரியவர்களுக்கு,
எங்குத் தொடங்குவது இதை என்று தெரியவில்லை தான், இருந்தாலும் இப்பொழுதேனும் தொடங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். எதை முதலில் எழுதுவது, இதை எழுத தான் வேண்டுமா? என்று மீண்டும் மீண்டும் மனம் என்னை அலைகழிக்கிறது. நீண்ட நெடு நாள்களாக மனதில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் இந்த எண்ணங்கள் என்னை ரொம்பவும் பாதித்துள்ளது. மனம் நொந்து, வெறுத்து, ஒதுங்கிப் போக முற்பட்ட போதெல்லாம் அறிவு விழித்துக்கொண்டு எழுப்பி விட்டுள்ளது. இருந்தாலும் இதை சொல்லிவிட தான் வேண்டும். இன்றில்லாவிட்டால் என்றேனும் ஒரு நாள் இது மனதை ரணப்படுத்தி விடும் . அதன் பாதிப்பு எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே பயமாக உள்ளது. தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முந்நூறு முறை அரற்றுகின்ற இதயங்களே உங்கள் செவிகளைச் கொஞ்ச நேரம் இரவல் தாருங்கள்!
தமிழுக்கு நேர்ந்த சாபம். அதற்குச் சாபவிமோசனம் எங்குக் கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்? எப்படிப் பெறுவது? என்று கிடைக்கும்? கிடைக்குமா? என்ற வினாக்களைத் தினமும் நெஞ்சில் சுமந்த வண்ணம் பயணிக்கும் இந்த பயணம் எனக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரமின்றி தமிழ் மொழிக்கு என்ன நேருமோ? தமிழினம் என்னாகுமோ? நமது சந்ததியினர் இந்த மண்ணில் வாழுவார்களா என்ற சந்தேகங்களைச் சுமந்த வண்ணம் தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கும் தருணங்களை நான் வெறுக்கிறேன். தினம் தினம் உலகின் ஏதாவது ஒரு மூளையில் தமிழினத்தின் அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இதயங்களே என் வேதனை உங்களுக்குப் பிடிப்படுகிறதா? அல்லது இது அர்த்தமில்லாத பயம் என்று ஒதுங்கிப்போக முற்படுகிறீர்களா?அப்படி என்னத்தான் துன்பம் நேர்ந்து விட்டது இவர் இப்படி தேவையேயில்லாமல் அரற்றுவதற்கு என்று அலட்சியத்தோடு இதைப் படிக்கிறீர்களா?
தமிழ் செய்யும் உள்ளங்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் பற்றாளர்களே, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே, தமிழ் எங்கள் உயிர் என்று முழக்கமிடும் இதயங்களே, உண்மையைச் சொல்லுங்கள் என் பிதற்றல் வெறும் குமுறலா? இது கண்காணிக்கத் தேவையற்றதா? தமிழுக்காக உழைப்பவர்களை எங்குக் கண்டாலும் தலை வணங்குகிறேன். ஆனால், என்ன காரணமோ, சாபமோ தெரியவில்லை தமிழ் செய்யத் துடிக்கும் சான்றோர்களிடையே ஒரு ஒருமைபாட்டைக் காணமுடியவில்லை! நான் செய்வது சரி என்று ஒரு சாராரும், நான் செய்வது மட்டும் தான் சரி என்று மற்றொரு சாராரும் தத்தம் எண்ணங்களோடு செயல்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. கற்ற மேன்மக்கள் சமுதாய நலன் கருதி தமிழ் என்ற பாசப்பிணைப்பில் இணைவது சாத்தியமாகாதா? எல்லோரும் தமிழ் வாழ வேண்டும், தமிழ் இம்மண்ணில் ஆலவிழுதாய், ஆணிவேராய் படர வேண்டும், நிலைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஏதேதோ செய்கிறார்கள், அதை இணைந்து செய்வதாகாதா? தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகம் ஒன்று தொடங்க வேண்டுமாயின் இவர்கள் எல்லாம் மனம் வைத்தால் ஆகும். பிரிந்து, பிளவுப்பட்டிருக்கும் போதே இவ்வளவு சாதிக்க முடிந்த இவர்களால் இணைந்து செயல்படும் போது இன்னும் அதிசயத்தக்க, அசாத்தியமான காரியங்களை ஆற்ற இயலும் என்று நம்புகிறேன். மூவேந்தர்கள் பிளவுப்பட்டு இருந்ததால் தமிழுக்கு ஏற்பட்ட இழப்புகள் பல. அவர்களைச் சாட நமக்கென்ன தகுதியிருக்கிறது. நாமும் இப்பொழுது அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்(கொன்றிருக்கிறோம்.) இறப்பு வீட்டில் பிணமாக இருக்க வேண்டும், திருமண வீட்டில் நான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் சாத்தியப்படுமா? கொஞ்சம் நாண் அகற்றப் பட்ட வில்லாக இருக்கக் கூடாது? தமிழ், தமிழர்கள் என்ற எண்ணத்தில் ஒன்றிணையக் கூடாதா? தலைவர்கள் அவரவர் நலனுக்காகப் பலவற்றை இழந்து விட்டனர் என்று சாடுகிற நாமும் பல நேரம் அதை தான் மீண்டும், மீண்டும் செய்கிறோம் என்பதை மற(று)ந்து விடுகிறோமா? அல்லது மறந்து விட்டதைப் போல் பாசாங்குச் செய்கிறோமா? நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து, தோள் கொடுத்து உதவ வேண்டாம், குறை கூறாமலாவது இருக்கலாமே! நல்லதை யார் செய்தால் என்ன, நாமும் அதற்கு உதவலாமே என்ற எண்ணத்தை வளரவிடுவோம். என்னால் மட்டும் தான் தமிழை வாழ வைக்க முடியும் என்று முதுகில் சுமையைச் சுமந்து கொண்டு திரிவதெல்லாம் எனக்கென்னவோ சரியென்று படவில்லை! உங்கள் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன் ஆனால், அந்த இறுமாப்புக்கு நான் தலைகுனிகிறேன். இழக்கின்ற சமுதாயமாகப் பல காலம் நமது அடையாளங்களை இழந்து விட்டோம். இனியும் இழக்க உள்ளத்தில் தெம்பில்லை! உண்மையை உரைக்க வேண்டுமாயின் துணிவில்லை என்பதுதான் இதற்குப் பொருத்தமாக இருக்கும். நாளை தமிழுக்கு என்ன நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தை அர்த்தமற்றதாக ஆக்க நமக்கு ஓர் ஆயுதம் தேவை, அது ஒற்றுமை என்ற ஒரு ஒற்றைச் சொல் தான். ஒற்றுமைக்கும் தமிழருக்கும் அக்காலம் தொட்டு இக்காலம் வரை பகை தானா? அந்தப் பகையை வேரறுப்பது எக்காலம்? தொன்மை, பழமை, இனிமை, வளமை, இளமை, வன்மை, மேன்மை, உண்மை, செம்மை, வாய்மை, தன்மை, என்று அனைத்து ’மை’ களையும் தன்னகம் கொண்ட தமிழுக்கு ஒரு ’மை’ என்ற ஒற்றுமை கிட்டுவது எக்காலம்? ஒற்றுமைக்கும் தமிழுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் அப்படி என்னத்தான் தீர்க்கவே இயலாத பகை என்று பல நாளும் என்னை நானே கேட்டு கேட்டு மாய்ந்து போகிறேன். காய்க்கும் மரம் தானே கல்லடி படும் , ஆக்கும் கரம் தானே சொல்லடி படும். நல்லது செய்ய என் இந்த தயக்கம். பாரதி கண்ட கனவாய் நானும் கனவோடு போய் சேர்ந்து விடுவேனோ? பதைகள் இங்கே பயணத்தை இன்றே இப்போதே தொடங்குவது நலமன்றோ?இதையெல்லாம் குத்திக்காட்ட, சொல்லிக்காட்ட இவருக்கென்ன தகுதி இருக்கிறது என்று பலரின் கேள்விகள் செவியில் விழாமல் இல்லை! எல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சுலபமாகத் தான் தெரியும் , இறங்கி வேலை செய்ய முடியுமா, சேவை செய்ய இயலுமா இவர்களால் என்று எனக்கே ஆப்பு அடிக்கும் சத்தமும் காதில் விழாமல் இல்லை! நல்லதைச் செய்வோம் முடியாவிட்டால் சொல்வோம் நல்லது இன்றே நடக்காது, நாளை நடக்கும், நாளை மறுநாள் நடக்கும் , அடுத்த வாரம் நடக்கும், அடுத்த மாதம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழுக்கு இழுக்கென்றால் அது என் முகத்தில் காரி உமிழ்வது போல் நினைக்கும் சாதரண, மிகச் சாதரண சக பயணி தான் அடியேனும்.
தமிழுக்கு நேர்ந்த சாபம். அதற்குச் சாபவிமோசனம் எங்குக் கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்? எப்படிப் பெறுவது? என்று கிடைக்கும்? கிடைக்குமா? என்ற வினாக்களைத் தினமும் நெஞ்சில் சுமந்த வண்ணம் பயணிக்கும் இந்த பயணம் எனக்குப் பிடிக்கவில்லை. சுதந்திரமின்றி தமிழ் மொழிக்கு என்ன நேருமோ? தமிழினம் என்னாகுமோ? நமது சந்ததியினர் இந்த மண்ணில் வாழுவார்களா என்ற சந்தேகங்களைச் சுமந்த வண்ணம் தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கும் தருணங்களை நான் வெறுக்கிறேன். தினம் தினம் உலகின் ஏதாவது ஒரு மூளையில் தமிழினத்தின் அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இதயங்களே என் வேதனை உங்களுக்குப் பிடிப்படுகிறதா? அல்லது இது அர்த்தமில்லாத பயம் என்று ஒதுங்கிப்போக முற்படுகிறீர்களா?அப்படி என்னத்தான் துன்பம் நேர்ந்து விட்டது இவர் இப்படி தேவையேயில்லாமல் அரற்றுவதற்கு என்று அலட்சியத்தோடு இதைப் படிக்கிறீர்களா?
தமிழ் செய்யும் உள்ளங்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் பற்றாளர்களே, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே, தமிழ் எங்கள் உயிர் என்று முழக்கமிடும் இதயங்களே, உண்மையைச் சொல்லுங்கள் என் பிதற்றல் வெறும் குமுறலா? இது கண்காணிக்கத் தேவையற்றதா? தமிழுக்காக உழைப்பவர்களை எங்குக் கண்டாலும் தலை வணங்குகிறேன். ஆனால், என்ன காரணமோ, சாபமோ தெரியவில்லை தமிழ் செய்யத் துடிக்கும் சான்றோர்களிடையே ஒரு ஒருமைபாட்டைக் காணமுடியவில்லை! நான் செய்வது சரி என்று ஒரு சாராரும், நான் செய்வது மட்டும் தான் சரி என்று மற்றொரு சாராரும் தத்தம் எண்ணங்களோடு செயல்படுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. கற்ற மேன்மக்கள் சமுதாய நலன் கருதி தமிழ் என்ற பாசப்பிணைப்பில் இணைவது சாத்தியமாகாதா? எல்லோரும் தமிழ் வாழ வேண்டும், தமிழ் இம்மண்ணில் ஆலவிழுதாய், ஆணிவேராய் படர வேண்டும், நிலைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஏதேதோ செய்கிறார்கள், அதை இணைந்து செய்வதாகாதா? தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகம் ஒன்று தொடங்க வேண்டுமாயின் இவர்கள் எல்லாம் மனம் வைத்தால் ஆகும். பிரிந்து, பிளவுப்பட்டிருக்கும் போதே இவ்வளவு சாதிக்க முடிந்த இவர்களால் இணைந்து செயல்படும் போது இன்னும் அதிசயத்தக்க, அசாத்தியமான காரியங்களை ஆற்ற இயலும் என்று நம்புகிறேன். மூவேந்தர்கள் பிளவுப்பட்டு இருந்ததால் தமிழுக்கு ஏற்பட்ட இழப்புகள் பல. அவர்களைச் சாட நமக்கென்ன தகுதியிருக்கிறது. நாமும் இப்பொழுது அதை தான் செய்து கொண்டிருக்கிறோம்(கொன்றிருக்கிறோம்.) இறப்பு வீட்டில் பிணமாக இருக்க வேண்டும், திருமண வீட்டில் நான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் சாத்தியப்படுமா? கொஞ்சம் நாண் அகற்றப் பட்ட வில்லாக இருக்கக் கூடாது? தமிழ், தமிழர்கள் என்ற எண்ணத்தில் ஒன்றிணையக் கூடாதா? தலைவர்கள் அவரவர் நலனுக்காகப் பலவற்றை இழந்து விட்டனர் என்று சாடுகிற நாமும் பல நேரம் அதை தான் மீண்டும், மீண்டும் செய்கிறோம் என்பதை மற(று)ந்து விடுகிறோமா? அல்லது மறந்து விட்டதைப் போல் பாசாங்குச் செய்கிறோமா? நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து, தோள் கொடுத்து உதவ வேண்டாம், குறை கூறாமலாவது இருக்கலாமே! நல்லதை யார் செய்தால் என்ன, நாமும் அதற்கு உதவலாமே என்ற எண்ணத்தை வளரவிடுவோம். என்னால் மட்டும் தான் தமிழை வாழ வைக்க முடியும் என்று முதுகில் சுமையைச் சுமந்து கொண்டு திரிவதெல்லாம் எனக்கென்னவோ சரியென்று படவில்லை! உங்கள் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன் ஆனால், அந்த இறுமாப்புக்கு நான் தலைகுனிகிறேன். இழக்கின்ற சமுதாயமாகப் பல காலம் நமது அடையாளங்களை இழந்து விட்டோம். இனியும் இழக்க உள்ளத்தில் தெம்பில்லை! உண்மையை உரைக்க வேண்டுமாயின் துணிவில்லை என்பதுதான் இதற்குப் பொருத்தமாக இருக்கும். நாளை தமிழுக்கு என்ன நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தை அர்த்தமற்றதாக ஆக்க நமக்கு ஓர் ஆயுதம் தேவை, அது ஒற்றுமை என்ற ஒரு ஒற்றைச் சொல் தான். ஒற்றுமைக்கும் தமிழருக்கும் அக்காலம் தொட்டு இக்காலம் வரை பகை தானா? அந்தப் பகையை வேரறுப்பது எக்காலம்? தொன்மை, பழமை, இனிமை, வளமை, இளமை, வன்மை, மேன்மை, உண்மை, செம்மை, வாய்மை, தன்மை, என்று அனைத்து ’மை’ களையும் தன்னகம் கொண்ட தமிழுக்கு ஒரு ’மை’ என்ற ஒற்றுமை கிட்டுவது எக்காலம்? ஒற்றுமைக்கும் தமிழுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் அப்படி என்னத்தான் தீர்க்கவே இயலாத பகை என்று பல நாளும் என்னை நானே கேட்டு கேட்டு மாய்ந்து போகிறேன். காய்க்கும் மரம் தானே கல்லடி படும் , ஆக்கும் கரம் தானே சொல்லடி படும். நல்லது செய்ய என் இந்த தயக்கம். பாரதி கண்ட கனவாய் நானும் கனவோடு போய் சேர்ந்து விடுவேனோ? பதைகள் இங்கே பயணத்தை இன்றே இப்போதே தொடங்குவது நலமன்றோ?இதையெல்லாம் குத்திக்காட்ட, சொல்லிக்காட்ட இவருக்கென்ன தகுதி இருக்கிறது என்று பலரின் கேள்விகள் செவியில் விழாமல் இல்லை! எல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சுலபமாகத் தான் தெரியும் , இறங்கி வேலை செய்ய முடியுமா, சேவை செய்ய இயலுமா இவர்களால் என்று எனக்கே ஆப்பு அடிக்கும் சத்தமும் காதில் விழாமல் இல்லை! நல்லதைச் செய்வோம் முடியாவிட்டால் சொல்வோம் நல்லது இன்றே நடக்காது, நாளை நடக்கும், நாளை மறுநாள் நடக்கும் , அடுத்த வாரம் நடக்கும், அடுத்த மாதம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழுக்கு இழுக்கென்றால் அது என் முகத்தில் காரி உமிழ்வது போல் நினைக்கும் சாதரண, மிகச் சாதரண சக பயணி தான் அடியேனும்.
Tuesday, March 30, 2010
பொய் முகம்
ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமான
பொய் முகங்கள்
மெய் பேசும்...................
பொய்யான முகங்கள்
செய்கின்ற நன்மை
எண்ணிலடங்காது..............
என்னை எனக்குக்
காட்டும்
தன்னை எனக்குக்
காட்டும்
விண்ணைத் தொட
எண்ணி
மண்ணைத் தொட்ட
பொய் முகங்களை
எனக்குப் பிடிக்கும்............
அதிர்ந்து போவேன் சில பொழுது
அறைந்து பேசும் தருணங்களில்
பதிவு செய்த
பதிவுகளை
மீண்டும் , மீண்டும்
நினைக்கையிலே
கற்ற பாடம் பலவாகும்
பெற்ற அனுபவம் புதிதாகும்.
நம்மை பற்றி நம்மிடமே
நா கூசமல் பேசும்
பொய் முகம்
நன்மை கொஞ்சம் நக்கல்
கொஞ்சம் அதில் மிஞ்சும்
தன்மையின்றி பேசிய பின்னர்
உண்மை சொன்னேன் என்று
உர(ரை)த்துச் செ(சொ)ல்லும்
உலகம் தலைகீழாய்
நம்மை தள்ளும்!
பொய் முகம்
கண்டு, கண்டு
மெய்யான முகமறிய
தவறினேன்
செய்யாத தவமெல்லாம்
பொய்யாகி போக
மெய் காண வேண்டி
போகிறேன்.
ஒவ்வொரு விதமான
பொய் முகங்கள்
மெய் பேசும்...................
பொய்யான முகங்கள்
செய்கின்ற நன்மை
எண்ணிலடங்காது..............
என்னை எனக்குக்
காட்டும்
தன்னை எனக்குக்
காட்டும்
விண்ணைத் தொட
எண்ணி
மண்ணைத் தொட்ட
பொய் முகங்களை
எனக்குப் பிடிக்கும்............
அதிர்ந்து போவேன் சில பொழுது
அறைந்து பேசும் தருணங்களில்
பதிவு செய்த
பதிவுகளை
மீண்டும் , மீண்டும்
நினைக்கையிலே
கற்ற பாடம் பலவாகும்
பெற்ற அனுபவம் புதிதாகும்.
நம்மை பற்றி நம்மிடமே
நா கூசமல் பேசும்
பொய் முகம்
நன்மை கொஞ்சம் நக்கல்
கொஞ்சம் அதில் மிஞ்சும்
தன்மையின்றி பேசிய பின்னர்
உண்மை சொன்னேன் என்று
உர(ரை)த்துச் செ(சொ)ல்லும்
உலகம் தலைகீழாய்
நம்மை தள்ளும்!
பொய் முகம்
கண்டு, கண்டு
மெய்யான முகமறிய
தவறினேன்
செய்யாத தவமெல்லாம்
பொய்யாகி போக
மெய் காண வேண்டி
போகிறேன்.
கவிதை கேளுங்கள் கருத்து சொல்லுங்கள்
முடியாது என்பதும்
நடவாது என்பதும்
முடமான வார்த்தைகள்
முடியும் என்றும்
நடக்கும் என்றும்
திடமாக நம்புங்கள்
இயலாது என்பதும்
இல்லை என்பது
தொல்லையான வார்த்தைகள்
இயலும் என்பதும்
இருக்கும் என்பதும்
இனிப்பான அனுபவங்கள்
வெற்றி என்பதும்
தோல்வி என்பதும்
துரத்தி வரும் சொர்கங்கள்
பெற்றோம் என்பதும்
விட்டோம் என்பதும்
தவிர்க்க முடியாது தருணங்கள்!
நடவாது என்பதும்
முடமான வார்த்தைகள்
முடியும் என்றும்
நடக்கும் என்றும்
திடமாக நம்புங்கள்
இயலாது என்பதும்
இல்லை என்பது
தொல்லையான வார்த்தைகள்
இயலும் என்பதும்
இருக்கும் என்பதும்
இனிப்பான அனுபவங்கள்
வெற்றி என்பதும்
தோல்வி என்பதும்
துரத்தி வரும் சொர்கங்கள்
பெற்றோம் என்பதும்
விட்டோம் என்பதும்
தவிர்க்க முடியாது தருணங்கள்!
Subscribe to:
Posts (Atom)