பொய்யும் புரட்டும்
நாயும் நரியும்
மனித வடிவாய் ஆனது
மெய்யும் பண்பும் ...
அன்பும் கருணையும்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தது
படித்தப் படிப்பும்
பெற்ற பட்டமும்
தலைகணம் மட்டும் தந்தது.
உண்மையும் நன்மையும்
நானிலம் தன்னில்
நலிந்து நலிந்து போனது.
நல்லவரெல்லாம் - மனம்
உள்ளவரெல்லாம்
வெம்பி வெறுத்து சாகுது
அல்லவரெல்லாம் - பணம்
கொண்டவரெல்லாம்
எம்பி குதித்து ஆடுது!
Sunday, May 23, 2010
பொய் பேசி போகும் உறவாக வேண்டாம்
மெய் பேசி வளரும் உறவாக வேண்டும்
கை வீசி போக உறவேதும் வேண்டாம்
கையோடு கைகோர்த்து துணையாக வேண்டும்!
வென்று குவிக்க தெம்பு உண்டு
நன்று செய்யும் மனங்கள் உண்டு
இன்றே தொடங்க நேரமில்லை!
என்றே பேசும் இளையர் கண்டு
நின்றே துடிக்கும் இதயம் சோர்ந்து!
முயற்சி காட்டும் முகம் கண்டு
அயர்ச்சி கொள்ளலாகாது!
வீழ்ச்சி கூட கற்கண்டு
ஆக்க வேண்டும் வழித்தேடு!
வாழ்க்கை ரொம்ப போராட்டம்
வாழ வேண்டும் அம்பாட்டம்
தோல்வி வரும் துயர் காட்டும்
துவழ வேண்டாம் துணியாட்டம்
துணையாக வருவதெல்லாம் பேயாட்டம்
ஒரு பொழுதில் மாறிவிடும் குரங்காட்டம்
பாறை ஒன்று இருக்கவேண்டும் மனமாட்டம்
பலகோடி இன்னல்களும் போகும் தூசியாட்டும்.
நன்று நினைத்து நன்மை செய்தால்
நமக்கே நலமாகும்!
வென்று குவிக்க நாள்கள எல்லாம்
இன்றே மலராகும்!
மெய் பேசி வளரும் உறவாக வேண்டும்
கை வீசி போக உறவேதும் வேண்டாம்
கையோடு கைகோர்த்து துணையாக வேண்டும்!
வென்று குவிக்க தெம்பு உண்டு
நன்று செய்யும் மனங்கள் உண்டு
இன்றே தொடங்க நேரமில்லை!
என்றே பேசும் இளையர் கண்டு
நின்றே துடிக்கும் இதயம் சோர்ந்து!
முயற்சி காட்டும் முகம் கண்டு
அயர்ச்சி கொள்ளலாகாது!
வீழ்ச்சி கூட கற்கண்டு
ஆக்க வேண்டும் வழித்தேடு!
வாழ்க்கை ரொம்ப போராட்டம்
வாழ வேண்டும் அம்பாட்டம்
தோல்வி வரும் துயர் காட்டும்
துவழ வேண்டாம் துணியாட்டம்
துணையாக வருவதெல்லாம் பேயாட்டம்
ஒரு பொழுதில் மாறிவிடும் குரங்காட்டம்
பாறை ஒன்று இருக்கவேண்டும் மனமாட்டம்
பலகோடி இன்னல்களும் போகும் தூசியாட்டும்.
நன்று நினைத்து நன்மை செய்தால்
நமக்கே நலமாகும்!
வென்று குவிக்க நாள்கள எல்லாம்
இன்றே மலராகும்!
Subscribe to:
Posts (Atom)