Pages

Sunday, September 19, 2010

கேள்விகள்

உணர்வு தெளிந்த
நாள் முதலாய்
ஆயிரமாயிரம் கேள்விகளாய்
ஆழ்மனதில்
குளத்தில் விழுந்த
கல்லாய் அதிர்வுகளை
அலைகளை எழுப்பி
விடை கண்டும் காணமலும்
அதுவாய்
அடக்கமாகி விடுகிறது.........


கேட்க நினைத்த கேள்விகளும்
கேள்வியாய் நிலைத்த கேள்விகளும்
கேட்காமல் விட்ட கேள்விகளும்
விடையே இல்லா வினாகளும்
வெறுப்பை கொட்டிய கேள்விகளும்
அருவருப்பைக் காட்டும் கேள்விகளும்
அதிகார வர்க்கக் கேள்விகளும்
அவமானப் படுத்தும் கேள்விகளும்
கோபம் தொனிக்கும் கேள்விகளும்


கேள்வி குறிகள் மண்டைகுள்
முள்ளாய் முளைத்து
குத்தியதே
கேட்க நினைக்கும் தருணங்களில்
அவை மொழியை இழந்து தவிக்கிறதே......

கேட்க வேண்டிய நேரம் விட்டு
மனமெங்கும் சதா ரணம் படுத்தும்
சாதாரண கேள்விகள்...........

வினாகள் மட்டும் நிலைத்து விட
விடைகள் எங்கோ தொலைந்து விட
வாழ்க்கை மட்டும் கேள்வியாய்............
எஞ்சி நின்று நகைகிறதே....