Pages

Thursday, April 28, 2011

மனிதர்கள்...

நாயும் நரியும்
மனித உருவில்
உலவும் உலகமிது
உண்மை சொன்னால்
உன்னைக் கொல்லும்
கொடுமை தேசமிது
கடமை செய்தால்
மடமை என்று
பேசும் வீணர் கூட்டமுண்டு
காக்காய் பிடித்தால்
கடுக்காய் கொடுத்தால்
தாங்கும் பூமியிது...

குறைகள் கூறி
பொய்யை உரக்க பேசி
நடிக்கும் கூட்டமுண்டு
நிறைகள் கண்டால்
கேலி பேசி
கேவலப்படுத்தி
கெடுக்கும் உறவுமுண்டு

உள்ளம் எல்லாம்
கள்ளம் வைத்து
பழகும் நட்புகளே
உன் நெஞ்சை தொட்டு
கேட்டு பாரும் - அது
உண்மை சொல்லும் நீ
திருட்டு பையனென்று....

கண்ணால் பேசி
கதைகள் அளக்கும் -நம்
பின்னால் வந்தே
முதுகில் அறையும்
அடங்கி போனால்
அடக்கப் பார்க்கும்
திமிறி எழுந்தால்
திணறி ஓடும்.....

பொய்யாய், பொய்யாய்
மனிதரம்மா....
பேயாய் பேயாய்
குணங்களம்மா
மெய்யாய் மெய்யாய்
நினைக்கையிலே
மேனி கொதிக்குது
தீயாய் அம்மா......!

தெரியாது...


ஆடை கட்டி
அழகைக் காட்டி
ஆளை மயக்கத்
தெரியாது..

கொஞ்சிப் பேசி
கொஞ்சம் குலாவி
காரியமாற்றத் தெரியாது..

வீட்டிலொரு வேசமும்
வெளியிலொரு வேசமும்
போட்டு ஆடத்
தெரியாது....

ஆளுக்கேற்ப
ஆளைப் பார்த்து
வேலை செய்யத்
தெரியாது!

எல்லாம் படித்தவள்
நான் தான் என்று
சொல்லால் செயலால்
தலைகணம் காட்டத்
தெரியாது...

தெரியும் என்பதை
தெரியாதென்றும்
தெரியாதென்பதை
தெரியும் என்றும்
தாளம் போடத்
தெரியாது...

கொடுத்தப் பணியை
எடுத்துச் செய்யாமல்
அடுத்தவர் தலையில்
அடுக்கத் திணிக்கத்
தெரியாது....

பணியைச் செய்யாது
பல்லை இளித்து
வெள்ளை தோலைக்காட்டி
பட்டம் காட்டி
மிரட்டி ஏய்க்கத்
தெரியாது..

இது என் வேலையே
இல்லை என்று
தள்ளி நின்று
வேடிக்கை காட்டத்
தெரியாது..

கொண்ட கோபமெல்லாம்..
நெஞ்சில் வைத்து
போட்டுக் கொடுத்துப்
பெயர் வாங்கத் தெரியாது..

காரியமாற்றக் காலை பிடித்து
காரியம் முடிகையில்
வீரியம் காட்டத்
தெரியாது...

பண்பாய் பேசி
அன்பாய் இருப்பதாய்
அக்கறை உள்ளதாய்
அழகாய் காட்டி
ஆளை கெளக்கத்
தெரியாது...

வீடு வாகனமென்று
அடுத்தவர் வாழ்வதைப்
பார்த்து
வயிறெரியத் தெரியாது..

நெஞ்சில் உள்ளதை
வார்த்தையில் மறைத்து
அன்பைப் பேண
தெரியாது...

உள்ளதை உள்ளப்படி
பேசி செருப்படி
பட்டாலும் இது
திருந்தாது......!