Pages

Thursday, September 2, 2010

உயிராய் வா

கல்லாய் தானே நீ இருந்தாய்
சொல்லால் மட்டும் தான் நிறைந்தாய்
சிலையாய் தானே நீ இருந்தாய்
இறையாய் உயிராய்சென்று வருவாய் இறைவா?

தொழுதால் தருவாய் வாழ்வென்று
அழுதேன் நாளும் உனை தொழுது
பழுதாய் போன விழியிரண்டு
விழுந்தால் எழுவேன் தினம் முயன்று...

இதயம் வலிக்கும் ஒரு பொழுதும்
இன்னல் தொடரும் பல பொழுதும்
சிக்கல் தந்தாய் எப்பொழுதும்
இரக்கம் இல்லை இப்பொழுதும்.....

பிழைகள் கண்ட பல பொழுதும்
சதிகள் கண்ட சில பொழுதும்
நெஞ்சை பிளக்கும் சினம் கொண்டும்
நஞ்சாய் மாறி வாழ்ந்ததுண்டு

கொடுமை வடிவாய் மனிதர்களை
படைத்ததென்ன பூமியிலே
அடிமை கொண்ட இறைவனிடம்
உடைத்துச் சொன்னேன் உண்மைகளை!...

விடியல் தேடும் விழியிரண்டும்
விழியில் ஓடும் நீ புரண்டு
புவியைக் காக்கத் தெய்வமுண்டு
புலியாய் போன மனிதனைத் தாக்க யாருண்டு?

நின்று கொள்ளும் தெய்வமெங்கே?
அன்றே கொல்லலாகாதா?
நன்று செய்த மனங்களை மட்டும்
கொன்று தீர்த்தல் தான் தகுமா?

வஞ்சம் கொண்ட நெஞ்சங்களில்
வாழ சென்று விட்டனையோ?
கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும்
பாழாய் போக விட்டனையோ...?

கல்லாய் தானே நீ இருந்தாய்
சொல்லாய் மட்டும் வாழ்கின்றாய்
தீயாய் போன உள்ளங்களில்
இறையாய் உயிராய் என்று வருவாய் இறைவா?........

விடையில்லா வினாக்கள்

கொல்லுகின்ற நோய்க்கெல்லாம்
வெல்லுகின்ற திறம் வைத்த இறைவா - சிலர்
சொல்லுகின்ற சொல்லுக்குள்ளே
கொல்லுகின்ற திறம் வைத்ததேனோ?

செல்லுகின்ற பாதையெல்லாம்
பள்ளம் வைத்து பார்க்கும் இறைவா - சிலர்
கள்ளம் வைத்து பழழகும் அழகை
உள்ளம் உணராதிருக்கச் செய்ததேனோ?

கல்லும் முள்ளும் கொண்ட வழயில்
செல்ல வைத்து ரசிக்கும் இறைவா - மனிதன்
உள்ளம் மட்டும் மறைத்து வைத்து
அள்ளல் வாழ்வில் சேர்த்ததேனோ?

இலச்சை கெட்ட மனிதரெல்லாம்
இலங்கல் வழ செய்த இறைவா - சில
நல்ல இதயம் வாழ மட்டும்
இளப்பம் மனதில் கொடுத்ததேனோ?

குழப்பம் நிறைந்த எனது வினாக்கள்
விளக்கமின்றி போனதிறைவா - நாளும்
கலக்கம் மனதில் சேர வைத்து
உளமை மட்டும் மறைத்ததேனோ?