கல்லாய் தானே நீ இருந்தாய்
சொல்லால் மட்டும் தான் நிறைந்தாய்
சிலையாய் தானே நீ இருந்தாய்
இறையாய் உயிராய்சென்று வருவாய் இறைவா?
தொழுதால் தருவாய் வாழ்வென்று
அழுதேன் நாளும் உனை தொழுது
பழுதாய் போன விழியிரண்டு
விழுந்தால் எழுவேன் தினம் முயன்று...
இதயம் வலிக்கும் ஒரு பொழுதும்
இன்னல் தொடரும் பல பொழுதும்
சிக்கல் தந்தாய் எப்பொழுதும்
இரக்கம் இல்லை இப்பொழுதும்.....
பிழைகள் கண்ட பல பொழுதும்
சதிகள் கண்ட சில பொழுதும்
நெஞ்சை பிளக்கும் சினம் கொண்டும்
நஞ்சாய் மாறி வாழ்ந்ததுண்டு
கொடுமை வடிவாய் மனிதர்களை
படைத்ததென்ன பூமியிலே
அடிமை கொண்ட இறைவனிடம்
உடைத்துச் சொன்னேன் உண்மைகளை!...
விடியல் தேடும் விழியிரண்டும்
விழியில் ஓடும் நீ புரண்டு
புவியைக் காக்கத் தெய்வமுண்டு
புலியாய் போன மனிதனைத் தாக்க யாருண்டு?
நின்று கொள்ளும் தெய்வமெங்கே?
அன்றே கொல்லலாகாதா?
நன்று செய்த மனங்களை மட்டும்
கொன்று தீர்த்தல் தான் தகுமா?
வஞ்சம் கொண்ட நெஞ்சங்களில்
வாழ சென்று விட்டனையோ?
கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையையும்
பாழாய் போக விட்டனையோ...?
கல்லாய் தானே நீ இருந்தாய்
சொல்லாய் மட்டும் வாழ்கின்றாய்
தீயாய் போன உள்ளங்களில்
இறையாய் உயிராய் என்று வருவாய் இறைவா?........
No comments:
Post a Comment