என்றோ எப்போதோ
எப்படியோ நிகழ்தது
ஏனோ அடிக்கடி
தோன்றி தொணதொணக்கிறது....
அன்றே அப்போதே
மறந்ததாக இறந்ததாக
எண்ணிய நொடிகளின்
நெடிகள்
இன்றும் இப்போதும்
மூக்குத் தூவரங்களை
துளைக்கிறது.............
இறந்த அந்த நிமிடம்
அவ்வப்போது
உயிர்ப்பித்து எழுந்து
உயிரை உலுக்குகிறது.....
அன்று பட்ட
அவமானதை விட
அசிங்கதை விட
இன்றும் நினைவை
அழுக்காக்கி அழுகிறது மனம்....
அந்த அவமான தருணங்கள்
தருகின்ற சன்மானம்
விலைக்குப் போனது
என் தன்மானம்....
யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது
ஒருவனைத் தவிர
அந்த ஒருவனும்
அறியாமல்
அடிக்கடி வந்து
அச்சுறுத்துகிறது
அந்த அணையாத
அவமான தருணங்கள்.......
Saturday, September 11, 2010
குற்றமும் சுற்றமும்

குற்றம் செய்த போது தானே
சுற்றம் வந்தது - என்
குற்றம் எல்லாம்
இடித்துரைத்து
பட்டம் தந்தது
ஓடிப்போனவள் என்று
பட்டம் தந்தது
எண்ணமெல்லாம் வார்த்தையாகி
நெஞ்சில் நின்றது - இந்த
சொந்தமெல்லாம்
பந்தம் கொள்ள
உறவு வந்தது -நல்
வரவு சொன்னது
வாழ்ந்து விட்டால்
வீழ்ந்து போக உறவுகள்
சூழ்ந்து கொள்ளுமே
சூழ்ச்சி செய்து சூது பல
சொல்லி மகிழுமே - எம்மை
எள்ளி மகிழுமே
திருந்தி வந்தேன்
திரும்பி வந்தேன் - தினம்
வரிந்தி அழுதேன்
உறுதி எல்லாம்
சிதறி போக
பயணம் போகிறேன் - இறுதிப்
பயணம் போகிறேன்.
உளறல்கள்
புல்வெளி எங்கும் - என்
மனவெளி
ஒரு பட்டாம் பூச்சியாய்
படபடக்கிறது...........
அலைகளில்
ஆடும் சிறு
படகாய்
ஆடி ஆடி
தத்தளிக்கிறது
அடிக்குப் பயந்தழுவும்
சிறு குழந்தையாய்
மனம்
அடிக்கடி
துடித்துடிக்கிறது
புரிந்ததும்
புரியாததுமாய்
விளங்கியதும்
விளங்காததுமாய்
எதையோ புரிந்து கொள்ளவும்
எதையோ விளங்கிக்கொள்ளத்
துடிக்கவும் மனம் படாதபாடு படுகிறது....
மனவெளி
ஒரு பட்டாம் பூச்சியாய்
படபடக்கிறது...........
அலைகளில்
ஆடும் சிறு
படகாய்
ஆடி ஆடி
தத்தளிக்கிறது
அடிக்குப் பயந்தழுவும்
சிறு குழந்தையாய்
மனம்
அடிக்கடி
துடித்துடிக்கிறது
புரிந்ததும்
புரியாததுமாய்
விளங்கியதும்
விளங்காததுமாய்
எதையோ புரிந்து கொள்ளவும்
எதையோ விளங்கிக்கொள்ளத்
துடிக்கவும் மனம் படாதபாடு படுகிறது....
Monday, September 6, 2010
மனிதம்
நல்லவை வெறுப்போம்
அல்லவை வளர்ப்போம்
நன்னெறி புதைப்போம்
தீ நெறி கொள்வோம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
முகத்தை மறைத்து
முகமூடிக்கொள்வோம்
அகத்தை மறைக்க
அழகாய் நடிப்போம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
உள்ளமெல்லாம் கள்ளம் வைத்து
உறவுக்குள்ளே பொய்யைத் திணித்து
பழகும் மனிதர் பெருகும் யுகமிது
பண்பாய் வாழ்வது பெரும் பாடாயானது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்...
முகத்துக்கு நேராய் புகழ்கிறவர்
முதுகுக்குப் பின்னால் இகழ்கிறவர்
என்றேயான உலகமிது
என்றோ புதந்தது உண்மையது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
புத்தன் யேசு காந்தி வழியில்
புத்தம் புதிதாய் பிறந்தேனென்று
சத்தம் போட்டுக் கூறி கொள்வார்
சதிகள் பலவும் செய்து கொள்(ல்)வார்
இதுதான் ம னிதம்
இனிமேல் புனிதம்
பொருளாய் பணமாய் கொடுத்தால்
உன்னை போற்றி மகிழும் உலகமிது
வெறும் புல்லாய் நீயும் இருந்தால்
உன்னை மிதித்து நகைக்கும் வையமிது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
மனித நெறிகளெல்லாம்
வினோத வரிகளாக - என்
புரிதல் தப்பாய் போக
புத்தா நியும் பிறப்பாய்-என்
சித்தம் தெளிய வைப்பாய்!
புத்தம் சரணம் கச்சாமி........
அல்லவை வளர்ப்போம்
நன்னெறி புதைப்போம்
தீ நெறி கொள்வோம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
முகத்தை மறைத்து
முகமூடிக்கொள்வோம்
அகத்தை மறைக்க
அழகாய் நடிப்போம்
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
உள்ளமெல்லாம் கள்ளம் வைத்து
உறவுக்குள்ளே பொய்யைத் திணித்து
பழகும் மனிதர் பெருகும் யுகமிது
பண்பாய் வாழ்வது பெரும் பாடாயானது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்...
முகத்துக்கு நேராய் புகழ்கிறவர்
முதுகுக்குப் பின்னால் இகழ்கிறவர்
என்றேயான உலகமிது
என்றோ புதந்தது உண்மையது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
புத்தன் யேசு காந்தி வழியில்
புத்தம் புதிதாய் பிறந்தேனென்று
சத்தம் போட்டுக் கூறி கொள்வார்
சதிகள் பலவும் செய்து கொள்(ல்)வார்
இதுதான் ம னிதம்
இனிமேல் புனிதம்
பொருளாய் பணமாய் கொடுத்தால்
உன்னை போற்றி மகிழும் உலகமிது
வெறும் புல்லாய் நீயும் இருந்தால்
உன்னை மிதித்து நகைக்கும் வையமிது
இதுதான் மனிதம்
இனிமேல் புனிதம்
மனித நெறிகளெல்லாம்
வினோத வரிகளாக - என்
புரிதல் தப்பாய் போக
புத்தா நியும் பிறப்பாய்-என்
சித்தம் தெளிய வைப்பாய்!
புத்தம் சரணம் கச்சாமி........
Subscribe to:
Posts (Atom)