Pages

Saturday, September 11, 2010

அவமான தருணங்கள்

என்றோ எப்போதோ
எப்படியோ நிகழ்தது
ஏனோ அடிக்கடி
தோன்றி தொணதொணக்கிறது....

அன்றே அப்போதே
மறந்ததாக இறந்ததாக
எண்ணிய நொடிகளின்
நெடிகள்
இன்றும் இப்போதும்
மூக்குத் தூவரங்களை
துளைக்கிறது.............

இறந்த அந்த நிமிடம்
அவ்வப்போது
உயிர்ப்பித்து எழுந்து
உயிரை உலுக்குகிறது.....

அன்று பட்ட
அவமானதை விட
அசிங்கதை விட
இன்றும் நினைவை
அழுக்காக்கி அழுகிறது மனம்....

அந்த அவமான தருணங்கள்
தருகின்ற சன்மானம்
விலைக்குப் போனது
என் தன்மானம்....

யாருக்கும் தெரியாது
ஊருக்கும் தெரியாது
ஒருவனைத் தவிர
அந்த ஒருவனும்
அறியாமல்
அடிக்கடி வந்து
அச்சுறுத்துகிறது
அந்த அணையாத
அவமான தருணங்கள்.......

No comments:

Post a Comment