என்னுடையதென ஓர் அடையாலம்
அது எது?
எனக்கென ஓர் அங்கிகாரம்
அது என்ன?
அடையாலம் வேண்டும் என்று
அலையவில்லை
அங்கிகாரம் வேண்டும் என்று
ஆணவமில்லை........
கடமைக்குக் கூலி
கேட்கவில்லை
கூலிக்கு கடமை
ஆற்றவில்லை
உண்மைக்குப் புறம்பாய்
நடக்கவில்லை
பொய்யையே முதலாய்
கொள்ளவில்லை
புறம் பேசி பிறர் வாழ்வைக்
கெடுக்கவில்லை
அறம் பேசி அரிசந்திரனாய்
நடிக்கவில்லை
துதி பாடி யாரையும்
மயக்கவில்லை
சதி செய்து யாரையும்
கெளக்கவில்லை
பிழை செய்து சரியென்று
சாதிக்கவில்லை
நிலை கெட்டு மனமென்றும்
பாதிக்கவில்லை
என் அடையாலம்
தான் என்ன
அதை தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
புத்தன் வாயில் எச்சிலாய்
காந்தி வீட்டின் சொரி நாயாய்
கம்பன் வீட்டு கழிவாய்
காமராஜரின் நகங்களின் அழுக்காய்
அன்னை தெரெசாவின் எச்சமாய்
என்று உலகில் உள்ள
நல்லவர்களின் மிச்சமாய்
ஓர் அடையாலம் வேண்டும்......