Saturday, April 10, 2010
Friday, April 9, 2010
தொலைபேசியும் மாணவர்களும்.
கைத் தொலைபேசி இல்லாத உலகத்தில் மாணவர்கள் எப்படியிருப்பார்கள். அதுவும் இடைநிலைப்பள்ளி மாணவர்களையும் தொலைப்பேசியையும் பிரிக்கவே முடியாது. பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களின் தொலைப்பேசியில் இருக்கின்றன என்று சொன்னால் யாரேனும் நம்புவார்களா? யாரேனும் நம்புவதிருக்கட்டும் சம்பந்தப்பட்ட அந்தப் பையனின் அல்லது பெண்ணின் பெற்றோர் நம்புவார்களா?
மனதைக் குடையும் இதை யாரிடமாவது சொல்லி விட வேண்டும். அழிந்து போகும் நம் மாணவச் சமுதாயத்தைக் காப்பாற்றுவது யார். ? வீட்டுக்கும் அடங்காமல், பள்ளியில் ஆசிரியருக்கும் அடங்காமல். கண்டவர்களின் கையில் அடிபடும் இந்த மாணவர்களைத் திருத்தவே இயலாத? முடியையும் முழியையும் பார்த்தால் சில நேரங்களில் நமக்கே கூட பயமாக இருக்கிறது இந்த மாணவர்களின் நடத்தை.
வெளியில் சொல்லக் கூடியதா இந்த விக்ஷயம் என்று எனக்கும் தெரியவில்லை இருப்பினும் எனக்கென்ன வந்தது என்றிருக்க முடியவில்லையே. அல்லது இது எல்லோருக்கும் தெரிந்த புளித்துப் போன ஒன்றா? என்க்குத் தான் தெரியவில்லையோ?
மாணவர்கள் நல்லது எது கெட்டது எது என்று தெரியாத வயதில். செய்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவியலாத வயதில் இது போன்ற விக்ஷயங்களில் மனதைச் செலுத்துவது எந்த வகையில் ஞாயமென்று தெரியவில்லை. நாளை இந்தத் தகவல் சாதனங்களின் வளர்ச்சி இன்னும் பெரிதாக, விபரீதமாக ஆகிவிடும் பட்சத்தில் நமது குழந்தைகள் எப்படி வளருவார்கள் என்று நினைத்துப் பார்க்கக் கூட தெம்பில்லை!
இந்த மாணவச் சமுதாயம் இப்படித் தறிகெட்டுப் போக யார் காரணம். பெற்றோரா? ஆசிரியரா? நண்பர்களா, சுற்றுச் சூழலா? என்று விவாதிக்க நான் விரும்பவில்லை. இது இன்று நேற்று தொடங்கிய விவாதமல்ல. ஒரு தவறு நிகழும் போது எல்லாம் இப்படி ஆய்வு செய்து கொண்டிருப்பதை விட்டு அதனைத் தடுக்க, ஒடுக்க, அழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருந்தால் ஒரு காசுக்காவது பயன்கண்டிருக்கலாம். நாம் யார் மீதாவது பழியைச் சுமத்தி தப்பித்துக் கொள்ளும் கட்டாயத்திலா இருக்கிறோம்.கெட்டு சீரழிந்து போவது நம் மாணவர்கள். கெட்டு சீரழிந்து போன சிலரைப், அவர்களின் கதையை நிலையைப் பார்த்து கூட திருந்த முடியாதா ஜென்மங்களா நம்து மாணவர்கள். ? சரியான வழிக்காட்டி இல்லையா? சரியானதைச் சொல்ல ஆள்ளில்லையா?
இடைநிலைபள்ளியில் இவர்களது முதல் கல், காதல். கதால் வயப்பட்ட பின் அம்பிகாவதி, அமராவதியை விட நம் மாணவர்கள் மும்முறமாக செய்ல்படுகிறார்கள். இதில் பாதிப்பும் பரிதவிப்பும் என்னவோ பெண்ணுக்குத் தான். ஆனால் அதை உணரும் தருணத்தில் எல்லாம் கைமீறி போயிருக்கும். சிலர் சுதகரித்துக் கொண்டு வெளியே வருகின்றனர். பலரோ இதிலேயே முழ்கி, எதையெல்லாம் இழக்ககூடாதோ அதையெல்லாம் இழந்து ..................
கேமராவோடு கூடிய இந்த சின்னஞ்சிறு பெட்டி கடைசியில் சவப்பெட்டியைத் தயார்ப்ப்படுத்தி விடுகிறது. மாணவிகளை வைத்து வித விதமாய்( ........................) உங்கள் கற்பனைக்கு எட்டாத பல(பலான) படங்களுக்கு ஈடாக இந்த மாணவிகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அறிந்து நடக்கிறதா? அறியாமல் நடக்கிறதா? தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா? எப்படியோ நடக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை சம்பந்தப்பட்ட பெண்களின்(மாணவிகளின்) படம் (முகம்) மட்டும் தெரிகிறது.இதற்குப் பின்னால் இருப்பவர்கள் (பெரும்பாலும் ஆண்கள் முகம் தெரியாத வகையில் மிகவும் சமர்த்தியமாக இக்காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. சில காட்சிகளில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெயர், அலைபேசி எண் சகிதம் படம் ஒடிக்கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் அன்றி இக்காட்சிகள் இணையத்திலும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. மாணவிகள் ............ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சொல்வதற்கும் எழுதுவதற்கும் கூட வார்த்தைகள் இல்லை. மனம் குமுறுகிறது. நயனங்கள் இதை எழுதும் போது பல முறை பனித்துப் போகிறது. நெஞ்சு வலிக்கிறது..... அடைக்கிறது......... இதனால் பாதிப்பு யாருக்கு ஒரு பெண் தவறிழைத்தால் அந்த குடும்பமே அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது இன்னுமும், இன்றும் ஆண்களுக்கான உலகமாகத் தானே இருக்கிறது. ஆண் பிள்ளைகள் எதை செய்தாலும் அதை துடைத்து விட்டு அடுத்த கணமே நல்லவர் முகமூடியை அணிந்து கொள்ள வாய்ப்பு கொட்டி கிடக்கும் உலகமிது. ஆனால் பெண் அப்படி முடியாதே, ஆயிரத்தெட்டு வியாக்கினங்கள் பேசும் உலகம், உலகம் பேசுவதிருக்கட்டும் கூடவே இருந்து குழியில் தள்ளும் உறவுகள்.
எங்கே செல்லும் இந்த பாதை, எங்கே முடியும் இந்த பயணம்? இனி பாதை தெரியுமா? பயணம் தொடருமா இந்த மாணவர்களின் வாழ்க்கை?
ஆகவே, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் அலைப்பேசிகளை அடிக்கடி கவனியுங்கள். யாரோடு அவர்களின் நட்பு என்று ஆராயுங்கள். ஒரு செடி நடுகிறோம்.... அது வளர மண் அணைத்து விடுகிறோம், சுற்றி வேலியிடுகிறோம், தினமும் நீர் ஊற்றுகிறோம், உரமிடுகிறோம். ஒரு செடியைக் கவனிக்க இவ்வளவு செய்யும் நாம் குழந்தைகளைக் கவனிக்க எவ்வளவு செய்ய வேண்டுமென எண்ணிப்பாருங்கள். ஆண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே பெண்ணை மதிக்கக் கற்றுகொடுங்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவது தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்று தான் சொல்ல முடியும். ஆசிரியர் வளர்ப்பினில் குழந்தை நல்லவனாவதாக எந்தப் பாட்டும் குறிப்பிட வில்லை. ஒரு சாதனை படைத்த பிள்ளையின் பின்னால் ஒரு சாதனை படைத்த பெற்றோரிருப்பதாக நான் நம்புகிறேன். அந்த சாதனை பெறோர்கள் நீங்கள் தான். அந்த சாதனை மாணவர்கள் நீங்கள் தான். எஅங் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எங்கே பிறந்தோம் என்பது போல். என்ன சாதித்தோம். புத்தர் அரண்மனையில் பிறந்தார், அரசராகவில்லை போதி மர புத்தனாய் கொல்லாமையைப் போதித்தான். இயேசு நாதர் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார் மாடு மேய்பவனாகவில்லை, மாறாக ஆன்மா பலம் பொருந்திய போதகனாக விளங்கினான்.
விழுந்தோம் என்பதை விட எழுந்தோம் சாதித்தோம் என்பது தான் முக்கியம். ஆகவே குழந்தைகள் தவறிழைத்தப்பின் அவர்கள் தலையில் பாரமான கல்லைத் தூக்கி வைத்து அவர்களை அவமதித்து விடாதீர்கள். வாழ வழிசெய்து கொடுங்கள். இருளில் இருந்து வெளியே வர உதவுங்கள்.
மனதைக் குடையும் இதை யாரிடமாவது சொல்லி விட வேண்டும். அழிந்து போகும் நம் மாணவச் சமுதாயத்தைக் காப்பாற்றுவது யார். ? வீட்டுக்கும் அடங்காமல், பள்ளியில் ஆசிரியருக்கும் அடங்காமல். கண்டவர்களின் கையில் அடிபடும் இந்த மாணவர்களைத் திருத்தவே இயலாத? முடியையும் முழியையும் பார்த்தால் சில நேரங்களில் நமக்கே கூட பயமாக இருக்கிறது இந்த மாணவர்களின் நடத்தை.
வெளியில் சொல்லக் கூடியதா இந்த விக்ஷயம் என்று எனக்கும் தெரியவில்லை இருப்பினும் எனக்கென்ன வந்தது என்றிருக்க முடியவில்லையே. அல்லது இது எல்லோருக்கும் தெரிந்த புளித்துப் போன ஒன்றா? என்க்குத் தான் தெரியவில்லையோ?
மாணவர்கள் நல்லது எது கெட்டது எது என்று தெரியாத வயதில். செய்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவியலாத வயதில் இது போன்ற விக்ஷயங்களில் மனதைச் செலுத்துவது எந்த வகையில் ஞாயமென்று தெரியவில்லை. நாளை இந்தத் தகவல் சாதனங்களின் வளர்ச்சி இன்னும் பெரிதாக, விபரீதமாக ஆகிவிடும் பட்சத்தில் நமது குழந்தைகள் எப்படி வளருவார்கள் என்று நினைத்துப் பார்க்கக் கூட தெம்பில்லை!
இந்த மாணவச் சமுதாயம் இப்படித் தறிகெட்டுப் போக யார் காரணம். பெற்றோரா? ஆசிரியரா? நண்பர்களா, சுற்றுச் சூழலா? என்று விவாதிக்க நான் விரும்பவில்லை. இது இன்று நேற்று தொடங்கிய விவாதமல்ல. ஒரு தவறு நிகழும் போது எல்லாம் இப்படி ஆய்வு செய்து கொண்டிருப்பதை விட்டு அதனைத் தடுக்க, ஒடுக்க, அழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்திருந்தால் ஒரு காசுக்காவது பயன்கண்டிருக்கலாம். நாம் யார் மீதாவது பழியைச் சுமத்தி தப்பித்துக் கொள்ளும் கட்டாயத்திலா இருக்கிறோம்.கெட்டு சீரழிந்து போவது நம் மாணவர்கள். கெட்டு சீரழிந்து போன சிலரைப், அவர்களின் கதையை நிலையைப் பார்த்து கூட திருந்த முடியாதா ஜென்மங்களா நம்து மாணவர்கள். ? சரியான வழிக்காட்டி இல்லையா? சரியானதைச் சொல்ல ஆள்ளில்லையா?
இடைநிலைபள்ளியில் இவர்களது முதல் கல், காதல். கதால் வயப்பட்ட பின் அம்பிகாவதி, அமராவதியை விட நம் மாணவர்கள் மும்முறமாக செய்ல்படுகிறார்கள். இதில் பாதிப்பும் பரிதவிப்பும் என்னவோ பெண்ணுக்குத் தான். ஆனால் அதை உணரும் தருணத்தில் எல்லாம் கைமீறி போயிருக்கும். சிலர் சுதகரித்துக் கொண்டு வெளியே வருகின்றனர். பலரோ இதிலேயே முழ்கி, எதையெல்லாம் இழக்ககூடாதோ அதையெல்லாம் இழந்து ..................
கேமராவோடு கூடிய இந்த சின்னஞ்சிறு பெட்டி கடைசியில் சவப்பெட்டியைத் தயார்ப்ப்படுத்தி விடுகிறது. மாணவிகளை வைத்து வித விதமாய்( ........................) உங்கள் கற்பனைக்கு எட்டாத பல(பலான) படங்களுக்கு ஈடாக இந்த மாணவிகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அறிந்து நடக்கிறதா? அறியாமல் நடக்கிறதா? தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா? எப்படியோ நடக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை சம்பந்தப்பட்ட பெண்களின்(மாணவிகளின்) படம் (முகம்) மட்டும் தெரிகிறது.இதற்குப் பின்னால் இருப்பவர்கள் (பெரும்பாலும் ஆண்கள் முகம் தெரியாத வகையில் மிகவும் சமர்த்தியமாக இக்காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. சில காட்சிகளில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெயர், அலைபேசி எண் சகிதம் படம் ஒடிக்கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் அன்றி இக்காட்சிகள் இணையத்திலும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. மாணவிகள் ............ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சொல்வதற்கும் எழுதுவதற்கும் கூட வார்த்தைகள் இல்லை. மனம் குமுறுகிறது. நயனங்கள் இதை எழுதும் போது பல முறை பனித்துப் போகிறது. நெஞ்சு வலிக்கிறது..... அடைக்கிறது......... இதனால் பாதிப்பு யாருக்கு ஒரு பெண் தவறிழைத்தால் அந்த குடும்பமே அந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது இன்னுமும், இன்றும் ஆண்களுக்கான உலகமாகத் தானே இருக்கிறது. ஆண் பிள்ளைகள் எதை செய்தாலும் அதை துடைத்து விட்டு அடுத்த கணமே நல்லவர் முகமூடியை அணிந்து கொள்ள வாய்ப்பு கொட்டி கிடக்கும் உலகமிது. ஆனால் பெண் அப்படி முடியாதே, ஆயிரத்தெட்டு வியாக்கினங்கள் பேசும் உலகம், உலகம் பேசுவதிருக்கட்டும் கூடவே இருந்து குழியில் தள்ளும் உறவுகள்.
எங்கே செல்லும் இந்த பாதை, எங்கே முடியும் இந்த பயணம்? இனி பாதை தெரியுமா? பயணம் தொடருமா இந்த மாணவர்களின் வாழ்க்கை?
ஆகவே, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் அலைப்பேசிகளை அடிக்கடி கவனியுங்கள். யாரோடு அவர்களின் நட்பு என்று ஆராயுங்கள். ஒரு செடி நடுகிறோம்.... அது வளர மண் அணைத்து விடுகிறோம், சுற்றி வேலியிடுகிறோம், தினமும் நீர் ஊற்றுகிறோம், உரமிடுகிறோம். ஒரு செடியைக் கவனிக்க இவ்வளவு செய்யும் நாம் குழந்தைகளைக் கவனிக்க எவ்வளவு செய்ய வேண்டுமென எண்ணிப்பாருங்கள். ஆண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே பெண்ணை மதிக்கக் கற்றுகொடுங்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவது தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்று தான் சொல்ல முடியும். ஆசிரியர் வளர்ப்பினில் குழந்தை நல்லவனாவதாக எந்தப் பாட்டும் குறிப்பிட வில்லை. ஒரு சாதனை படைத்த பிள்ளையின் பின்னால் ஒரு சாதனை படைத்த பெற்றோரிருப்பதாக நான் நம்புகிறேன். அந்த சாதனை பெறோர்கள் நீங்கள் தான். அந்த சாதனை மாணவர்கள் நீங்கள் தான். எஅங் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எங்கே பிறந்தோம் என்பது போல். என்ன சாதித்தோம். புத்தர் அரண்மனையில் பிறந்தார், அரசராகவில்லை போதி மர புத்தனாய் கொல்லாமையைப் போதித்தான். இயேசு நாதர் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார் மாடு மேய்பவனாகவில்லை, மாறாக ஆன்மா பலம் பொருந்திய போதகனாக விளங்கினான்.
விழுந்தோம் என்பதை விட எழுந்தோம் சாதித்தோம் என்பது தான் முக்கியம். ஆகவே குழந்தைகள் தவறிழைத்தப்பின் அவர்கள் தலையில் பாரமான கல்லைத் தூக்கி வைத்து அவர்களை அவமதித்து விடாதீர்கள். வாழ வழிசெய்து கொடுங்கள். இருளில் இருந்து வெளியே வர உதவுங்கள்.
Wednesday, April 7, 2010
இளமை இதோ இதோ!
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் முழுவதும்
அலைகள்
மிஞ்சும் வார்த்தைகளில்
கொஞ்சும் பார்வைகளில்
கரையைத் தாண்டிய அலைகள்
மிச்சம் ஏதுமின்றி
கொட்டி வைத்த பின்னே
அச்சம் தேடி வந்து
உச்சம் காட்டுதம்மா!
தேர்வை எழுதக்கூட
ஆழ்ந்து படிக்கவில்லை
பார்வை உன் பார்வையில்
முழ்கிக் கொண்டே
வாழ்வைத் தேடுகிறேன்.
இழைத்தப் பிழைகளெல்லாம்
நெருப்பாய் சுடுகிறது
உண்மை உரைக்கும் போது
விழிகள் அழுகிறது
சொன்ன சொல்லை
ஒரு நாளும்
கேளாத செவிகள்
கண்ட சொல்லை
கேட்கும் போது
குனி குறுகி மடிகிறது.
வயது தந்த நோயை
காலில் உள்ள செருப்பாய்
வீட்டின் வெளியே
நிறுத்தி வைப்பாய்
நட்பும் நடப்பும் அறிந்து
வாழ்வில் வெற்றி கொள்வாய்.
நெஞ்சம் முழுவதும்
அலைகள்
மிஞ்சும் வார்த்தைகளில்
கொஞ்சும் பார்வைகளில்
கரையைத் தாண்டிய அலைகள்
மிச்சம் ஏதுமின்றி
கொட்டி வைத்த பின்னே
அச்சம் தேடி வந்து
உச்சம் காட்டுதம்மா!
தேர்வை எழுதக்கூட
ஆழ்ந்து படிக்கவில்லை
பார்வை உன் பார்வையில்
முழ்கிக் கொண்டே
வாழ்வைத் தேடுகிறேன்.
இழைத்தப் பிழைகளெல்லாம்
நெருப்பாய் சுடுகிறது
உண்மை உரைக்கும் போது
விழிகள் அழுகிறது
சொன்ன சொல்லை
ஒரு நாளும்
கேளாத செவிகள்
கண்ட சொல்லை
கேட்கும் போது
குனி குறுகி மடிகிறது.
வயது தந்த நோயை
காலில் உள்ள செருப்பாய்
வீட்டின் வெளியே
நிறுத்தி வைப்பாய்
நட்பும் நடப்பும் அறிந்து
வாழ்வில் வெற்றி கொள்வாய்.
Sunday, April 4, 2010
மெளனம்
நீ பல பொழுதுகளில்
எனக்கு பகையாய் இருக்கிறாய்!
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால் உனக்குத் தான் என்னை பிடிக்கவில்லை. என் போதாத காலத்தில் நீ என்னை விட்டு விலகி விடுகிறாய். இப்பொழுதெல்லாம் நான் உன்னை அடிக்கடி தேடுகிறேன், இருப்பினும் நீ என்னை அலட்சியப்படுத்துகிறாய். உன்னை அணிய மறந்த பல தருணங்கள் நான் அல்லல்பட்டதுண்டு. சொல்ல வேண்டியதெல்லாம் கொட்டி விடும் பழக்கத்தினால் நான் உன்னை பெரிதும் விரும்புகிறேன் என்றே சொல்லவேண்டும். நான் மறந்தாலும் நீ என்னை மறவாமலிருத்தல் வேண்டும். பல வேளைகளில் உன்னை மறந்து, துறந்து விடுவதால் நான் பட்ட ரணங்கள் சாதாரணனானவையல்ல. அவை என்னை உன்பால் அன்பு கொள்ளத் தூண்டுகிறது. நீ என்னை தள்ளி, ஒதுக்கி விட்டு போனாலும், நான் உன்னை நெருங்கி வருவேன், முயற்சிப்பேன். என் முயற்சிகளை யார் முறியடித்தாலும் நான் முதலில் தேடும் கவசம் நீ தான். நான் தேட தொடங்கும் முன்னே நீ வருவதாகதெனினும், நான் தேட தொடங்கியப் பிறகேனும் என் அருகில் வரலாகாதா? எப்போதும் உன்னை என் சட்டை பையிலோ, முடிந்தால் உதட்டிலோ தான் பத்திரப்படுத்த முயல்கிறேன். என் செய்வது அது முடியாமல் போகையில் நான் மாய்ந்து போகிறேன். அப்போதெல்லாம் நீ எங்கோ தூரத்தில் நின்று கொண்டு என்னை பார்த்து ஏளனமாக மிக ஏளனமாக நகைக்கிறாய் என்பது மட்டும் சாஸ்வதம். அப்படி என்ன என்னோடு உனக்குப் பகை. என்னை வம்பில் விட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதில் உனக்கென்ன சுகம். வா தயவு செய்து வந்து விடு. என்னோடு இரு. எப்பொழுதேனும் அல்ல. இனி எப்போதும் நீ என்னுடனேயே இருந்து விடு. வாழ்க்கை வட்டம் என்னை வெளியே தள்ளுகிறது. வட்டத்திற்குள் இருக்க எனக்கும் விருப்பமில்லையாதலால் நான் இனி மெளனியாகிறேன். என்னை உன்னுள் புதைத்து விடு. இல்லை நானே உன்னுள் புதைந்து கொள்கிறேன். இதயத்தைப் பூட்டிக் கொள்கிறேன். இதயம் பூட்டப்பட்டால் தான் நீ வசப்படுவாய். என்னை வசந்தமாக்குவாய். மெளனம் ஆன்மாவை நிரப்பட்டும்.
எனக்கு பகையாய் இருக்கிறாய்!
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால் உனக்குத் தான் என்னை பிடிக்கவில்லை. என் போதாத காலத்தில் நீ என்னை விட்டு விலகி விடுகிறாய். இப்பொழுதெல்லாம் நான் உன்னை அடிக்கடி தேடுகிறேன், இருப்பினும் நீ என்னை அலட்சியப்படுத்துகிறாய். உன்னை அணிய மறந்த பல தருணங்கள் நான் அல்லல்பட்டதுண்டு. சொல்ல வேண்டியதெல்லாம் கொட்டி விடும் பழக்கத்தினால் நான் உன்னை பெரிதும் விரும்புகிறேன் என்றே சொல்லவேண்டும். நான் மறந்தாலும் நீ என்னை மறவாமலிருத்தல் வேண்டும். பல வேளைகளில் உன்னை மறந்து, துறந்து விடுவதால் நான் பட்ட ரணங்கள் சாதாரணனானவையல்ல. அவை என்னை உன்பால் அன்பு கொள்ளத் தூண்டுகிறது. நீ என்னை தள்ளி, ஒதுக்கி விட்டு போனாலும், நான் உன்னை நெருங்கி வருவேன், முயற்சிப்பேன். என் முயற்சிகளை யார் முறியடித்தாலும் நான் முதலில் தேடும் கவசம் நீ தான். நான் தேட தொடங்கும் முன்னே நீ வருவதாகதெனினும், நான் தேட தொடங்கியப் பிறகேனும் என் அருகில் வரலாகாதா? எப்போதும் உன்னை என் சட்டை பையிலோ, முடிந்தால் உதட்டிலோ தான் பத்திரப்படுத்த முயல்கிறேன். என் செய்வது அது முடியாமல் போகையில் நான் மாய்ந்து போகிறேன். அப்போதெல்லாம் நீ எங்கோ தூரத்தில் நின்று கொண்டு என்னை பார்த்து ஏளனமாக மிக ஏளனமாக நகைக்கிறாய் என்பது மட்டும் சாஸ்வதம். அப்படி என்ன என்னோடு உனக்குப் பகை. என்னை வம்பில் விட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதில் உனக்கென்ன சுகம். வா தயவு செய்து வந்து விடு. என்னோடு இரு. எப்பொழுதேனும் அல்ல. இனி எப்போதும் நீ என்னுடனேயே இருந்து விடு. வாழ்க்கை வட்டம் என்னை வெளியே தள்ளுகிறது. வட்டத்திற்குள் இருக்க எனக்கும் விருப்பமில்லையாதலால் நான் இனி மெளனியாகிறேன். என்னை உன்னுள் புதைத்து விடு. இல்லை நானே உன்னுள் புதைந்து கொள்கிறேன். இதயத்தைப் பூட்டிக் கொள்கிறேன். இதயம் பூட்டப்பட்டால் தான் நீ வசப்படுவாய். என்னை வசந்தமாக்குவாய். மெளனம் ஆன்மாவை நிரப்பட்டும்.
Subscribe to:
Posts (Atom)