கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் முழுவதும்
அலைகள்
மிஞ்சும் வார்த்தைகளில்
கொஞ்சும் பார்வைகளில்
கரையைத் தாண்டிய அலைகள்
மிச்சம் ஏதுமின்றி
கொட்டி வைத்த பின்னே
அச்சம் தேடி வந்து
உச்சம் காட்டுதம்மா!
தேர்வை எழுதக்கூட
ஆழ்ந்து படிக்கவில்லை
பார்வை உன் பார்வையில்
முழ்கிக் கொண்டே
வாழ்வைத் தேடுகிறேன்.
இழைத்தப் பிழைகளெல்லாம்
நெருப்பாய் சுடுகிறது
உண்மை உரைக்கும் போது
விழிகள் அழுகிறது
சொன்ன சொல்லை
ஒரு நாளும்
கேளாத செவிகள்
கண்ட சொல்லை
கேட்கும் போது
குனி குறுகி மடிகிறது.
வயது தந்த நோயை
காலில் உள்ள செருப்பாய்
வீட்டின் வெளியே
நிறுத்தி வைப்பாய்
நட்பும் நடப்பும் அறிந்து
வாழ்வில் வெற்றி கொள்வாய்.
No comments:
Post a Comment