Pages

Thursday, September 2, 2010

விடையில்லா வினாக்கள்

கொல்லுகின்ற நோய்க்கெல்லாம்
வெல்லுகின்ற திறம் வைத்த இறைவா - சிலர்
சொல்லுகின்ற சொல்லுக்குள்ளே
கொல்லுகின்ற திறம் வைத்ததேனோ?

செல்லுகின்ற பாதையெல்லாம்
பள்ளம் வைத்து பார்க்கும் இறைவா - சிலர்
கள்ளம் வைத்து பழழகும் அழகை
உள்ளம் உணராதிருக்கச் செய்ததேனோ?

கல்லும் முள்ளும் கொண்ட வழயில்
செல்ல வைத்து ரசிக்கும் இறைவா - மனிதன்
உள்ளம் மட்டும் மறைத்து வைத்து
அள்ளல் வாழ்வில் சேர்த்ததேனோ?

இலச்சை கெட்ட மனிதரெல்லாம்
இலங்கல் வழ செய்த இறைவா - சில
நல்ல இதயம் வாழ மட்டும்
இளப்பம் மனதில் கொடுத்ததேனோ?

குழப்பம் நிறைந்த எனது வினாக்கள்
விளக்கமின்றி போனதிறைவா - நாளும்
கலக்கம் மனதில் சேர வைத்து
உளமை மட்டும் மறைத்ததேனோ?

No comments:

Post a Comment