Pages

Thursday, August 26, 2010

கனவில் வந்த அவன் ..........

மின்னலின் ஒளி கீற்றாய்
உன் பார்வைகள்

கண்ணை இடுக்கி பார்க்கும்
கலங்கிய விழிகளில்
நம் அன்பின் பிம்பங்கள்.......

நீ....நீயாகவே
நான் உனதாகவே
எந்த ஜென்ம
பந்தமிது
இந்த நிமிடம் வரையிலும் தொடர்கிறது

அழகான எல்லாம்
ஆண்மையான எல்லாம்
நீயாகிறாய்
உன் நிழலாய் இருக்கிறேன்
எனகான இடம் உன்
மனம் என்கிறாய்
பிணக்கான போதும்
கைபிரியாமல் இருக்கிறாய்........

நீண்டு வரும்
உன் கரங்களின்
அணைப்பு கதகதப்பு
இதமளிக்கும் தருணங்களில்
இதயத்தில் இமைகளில்
எனக்காக நீ இருக்கிறாய்
என நம்புகிறேன்..............

என்னை கவனிக்காமல்
இருப்பதாக காட்டினாலும்
உன் விழிகள் கவனிப்பதை
கவனித்துப் பார்த்து
கனிந்து போகிறேன்
காதலில் உறைந்து வேகிறேன்..

புகை மூட்டம் போல் உன் வதனம்
கனவில் மட்டும் வருகிறாய்
கணம் பொழுது இன்பம் தருகிறாய்........
கண் விழிக்காமல் ........
விழித்தால் எங்கோ மறைகிறாய்.......

No comments:

Post a Comment