துளித்துளியாய் சேர்த்து
வைத்த நினைவுகளை
தனித்தனியாய் பிரித்து
வைத்துப் பார்க்கிறேன்...........
இறந்த காலத்தின் மரண
ஓலங்கள்
மறைந்து போகாமல்
நிறைந்து
நெஞ்சில் உறைந்திருந்தது.
காலச்சுவடுகள் விட்டு சென்ற
கனத்த நினைவுகள்
கண்ணீர் கரையை
உடைத்து எழுந்த
காதல் தோல்விகள்
கனவும் நனவுமாய்
நிஜமும் நிழலுமாய்
பொய்யும் மெய்யுமாய்
எத்தனையோ கடந்த பாதை
அத்தனையும் இன்றெனக்கு கீதை
தோல்விகளை விற்று விற்று
வாங்கி வந்த ஞானங்கள்
வேள்விகளில் சுட்டு சுட்டு
கற்று கொண்ட பாடங்கள்
கேள்விகளைக் கேட்டு கேட்டு
விட்டு வைத்த பதில்களை
வாழ்க்கையில் தேடி வந்தேன்
வழிகள் எல்லாம் பள்ளங்கள்...........
No comments:
Post a Comment