போராடும் மனத்தோடுதினந்தோறும் வழிந்தோடும் கண்ணீர்
மறைத்தாலும் மறையாமல்
இதயத்தில் நீ.................
விழி போகும்
வழியெல்லாம்
தேடி பார்க்கிறேன் - நீ
போன வழியெல்லாம்
வந்து பார்க்கிறேன்....
உன்னோடு நான்
நடந்த பாதைகளை
கடந்து பார்க்கிறேன்
என்னை நீ
கை விட்ட நாளை மட்டும்
மறக்கப் பார்க்கிறேன்
வலியெல்லாம் விழி நீரில்
கழுவி பார்க்கிறேன்
அந்த வழி மட்டும் தெரியாமல்
தோற்று போகிறேன்!
கன்னத்தில் கைவைத்து
எண்ணத்தில் நீ நிறைத்த
வண்ணங்கள்
எண்ணி பார்க்கிறேன்
தினம் ஒரு துளி
நிமிடமேனும் என்னை
வதை செய்யும்
இந்த நினைவுகளை
மறக்கப் பார்க்கிறேன்.
கன்னத்தில் குழி விழ
வெண்ணிற பல் காட்டி
கண் நிறைய நீ சிரித்த
கணத்தையெல்லாம்
மனதிற்குள் பூட்டி வைத்து
பூத்ததுண்டு.
கண்ணாலே நீ பேசும்
கலையெனக்கு புரியாமல்
பின்னாலே ஒரு நாளில்
எண்ணாமல் எண்ணி நகைத்ததுண்டு.
மண்ணாக போன அந்த
பொன்னான தருணங்கள்
புண்ணாக இதயத்தைத் துளைக்கின்றது........
No comments:
Post a Comment