பொய்யும் புரட்டும்
நாயும் நரியும்
மனித வடிவாய் ஆனது
மெய்யும் பண்பும் ...
அன்பும் கருணையும்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தது
படித்தப் படிப்பும்
பெற்ற பட்டமும்
தலைகணம் மட்டும் தந்தது.
உண்மையும் நன்மையும்
நானிலம் தன்னில்
நலிந்து நலிந்து போனது.
நல்லவரெல்லாம் - மனம்
உள்ளவரெல்லாம்
வெம்பி வெறுத்து சாகுது
அல்லவரெல்லாம் - பணம்
கொண்டவரெல்லாம்
எம்பி குதித்து ஆடுது!
No comments:
Post a Comment