Pages

Sunday, May 23, 2010

பொய்யும் புரட்டும்
நாயும் நரியும்
மனித வடிவாய் ஆனது

மெய்யும் பண்பும் ...
அன்பும் கருணையும்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தது

படித்தப் படிப்பும்
பெற்ற பட்டமும்
தலைகணம் மட்டும் தந்தது.

உண்மையும் நன்மையும்
நானிலம் தன்னில்
நலிந்து நலிந்து போனது.

நல்லவரெல்லாம் - மனம்
உள்ளவரெல்லாம்
வெம்பி வெறுத்து சாகுது

அல்லவரெல்லாம் - பணம்
கொண்டவரெல்லாம்
எம்பி குதித்து ஆடுது!

No comments:

Post a Comment