நெஞ்சழுத்தம் உள்ளவர்களின்
உலகமிது
நெஞ்சார வாழ்பவருக்கு - வெறும்
உருண்டையிது....
அஞ்சாமல் அடாவடிகள்
அரங்கேறும்
அதை கேட்டால்
நெஞ்சார பொய் சொல்லும் - ஒரு
கூட்டம்......
ஏன் என்று கேட்பதற்கும்
தவறு என்று உரைப்பதற்கும்
தடுமாற்றம்........
தப்பி தவறி கேட்டு விட்டாலோ
இடமாற்றம்............
நல்லவனுக்கு நாலு பேர்
என்பதெல்லாம் பொய்யாச்சு
என்றும்
நயவஞ்சகருக்கு
நாற்பது பேர் உறவாச்சு......
கத்தி கத்தி பேசி விட்டு
குத்தி பிறரை நோக விட்டால்
பொய்யும் கூட புது(மை)
மெய்யாகும்.......
அடக்கமில்லா பேச்சும்
ஆணவம் காட்டும் நடையும்
அகங்காரமும் - அதை
அணைத்துக் கொள்ளு(ல்லு)ம்
நிர்வாகமும் ....................
தெய்வம் வலியது என்றனர்
தெய்வம் கொடியது ஆனதிங்கு
நீதி நேர்மை ஞாயமெல்லாம்
வீதியோரத்து சொரி நாயாய்
ஆதரவின்றி திரியிதிங்கு..........
No comments:
Post a Comment