சொல்லாமல் விட்டதுஎல்லாமே அழகு...............
சொல்லி முடித்ததில்
முடியாமல் முகிழ்கின்ற அழகு.....
நில்லாமல் போகின்ற
ரயிலொரு அழகு.............
ஆளில்லாமல் நீள்கின்ற
தண்டவாளமொரு அழகு...
முடிவில்லாமல் நீள்கின்ற
பாதைகள் அழகு.....
மலை மீதிருந்து
வீழ்கின்ற - நீர்
வீழ்ச்சியில் பேரழகு...
மழை பெய்யும் மாலையில்
களைகின்ற மேகங்கள் அழகு
நனைகின்ற சாலையில்
தேங்கி நிற்கின்ற நீர்
நிலைகள் அழகு.....
கலங்காமல் அழுங்காமல்
வானத்தைக் காட்டும்
காட்சி நிழல் அழகு.....
வானின் நீலத்தைக் காட்டும்
வெண்பனிகள் அழகு....
சொல்ல சொல்ல இயற்கை
அள்ள அள்ள குறையாத அழகு...
No comments:
Post a Comment