Pages

Wednesday, July 27, 2011

காதல் வந்தால்.....


காதல் தந்தாய்

கனவும் தந்தாய்

கண்ணில் ஒரு

மின்னல் தந்தாய்

நிஜமாய் வந்தாய்

நிழலாய் தொடர்ந்தாய்

நெஞ்சுக்குள்ளே நினைவாய்

மணந்தாய்…..

எண்ணி எண்ணி

ஏக்கம் கொண்டேன்

ஏக்கமெல்லாம் நீயே ஆனாய்

ஏனோ இந்த நாட்கள் எல்லாம்

என்னைக் கொல்லப் பார்க்கிறது..

எங்குச் சென்று நின்ற போதும்

கண்கள் உன்னைத் தேடியது

பாதை மாறி போகும் போது

பயணம் உன்னைச் சேர்கிறது

காதல் கொண்ட தருணம் மட்டும்

நெஞ்சுக்குள்ளே இனிக்கிறது..

பார்வை எங்கோ நிலைத்தப் போதும்

பாதம் íகோ சென்ற போதும்

உன்னைத் தேடி அழைகிறது- மனம்

உன்னைத் தானே நினைக்கிறது

நாம் பிரியும் தருணங்கள் இருக்கக்கூடாது

நாம் சேரும் தருணங்கள் நினைத்தால் ஆகாது

உன்னை பார்க்கிறேன்

என்னை கண்டு கொண்டேன்

உன் ஆண்மையில் என் பெண்மை மிளிர்கிறது..

இதமாய் பேசி

()ன்றும் எனக்காக

இருக்கிறாய் என்ற

இருப்பு என்னை

இனிதாய் வைத்திருக்கிறது..

பிரிந்தே இருந்தாலும்

உன் நினைவால்

நிறைந்தே இருக்கிறேன்இது

துயரமென்றாலும்

துணிந்து ஏற்கிறேன்.

மழை நேர இரவும்

மயங்கும் மாலையும்

தயக்கமாய் என்னுள்

தவிப்பாய் உறையும்..

சிலிர்ப்பாய் இருந்தாலும்சின்ன

சிரிப்பாய் அவை கரையும்.

No comments:

Post a Comment