பசுமையான விருட்சம்
ஒடி போன வருசம்
நினைத்துப் பார்க்கும் மனம்
கொஞ்சம் நிழல்
ஒரு நாற்காலி
சில புத்தகங்கள்
ஒரு மலைசாரல்
இரவும் இல்லாமல்
பகலும் இல்லாமல்
ஒரு பொழுது
முதுமையைக் காட்டும் முகம்
கண்ணை கடந்த காட்சிகள்
என்னை கடந்த நாள்கள்
நாள்களைக் கடந்த நான்
நரைத்து போன முடி
முடிந்து போன வாழ்க்கை
கண்ணாடி வழி விழி
பக்கத்தில் ஒரு கைத்தடி
பக்கத்து நாற்காலியில் மரணம்
கைகுலுக்கி குசலம் விசாரிக்கிறது........
இருந்தாலும்,
வாழ்ந்து விட்ட
நிமிசங்களின்
எச்சமாய்
மிச்சம் உள்ளதை
சுவைத்துப் பார்த்து
நகைக்கிறேன்.
நாளை என்னுடையதோ
எமனுடையதோ அறியேன்
பராபரமே!
No comments:
Post a Comment