
என்னை சுற்றி கவிதைகள்
வாசிக்க முயலாமல் நான்....
என்னை சுற்றி வண்ண மலர்கள்
வண்ணமில்லாமல் நான்.......
என்னை சுற்றி விண்மீன் கூட்டங்கள்
வெற்று வானமாய் நான்....
என்னை சுற்றி பேசும் சித்திரங்கள்
பேசா மடந்தயாய் நான்
என்னை சுற்றி அசைந்தாடும் மரங்கள்
வெறும் மரக்கட்டையாய் நான்....
என்னை சுற்றி ஏகாந்தம்
எதையும் கவனிக்காமல் நான்...
என்னை சுற்றி இயங்கும் உலகம்
இயக்கமில்லாமல் நான்...
என்னை சுற்றி தேவதைகள்
ஊனப்பட்டவளாய் நான்.....
என்னை சுற்றி ஒளிவட்டம்
ஓர் ஓரம் தேடி ஒளிந்து கொள்ளும் நான்.........
பாலை வனம் போல் நான்
சோலை வனமாய் வாழ்க்கை
குருடனாகவே நான்
வெளிச்சமாய் கடவுள்........
No comments:
Post a Comment