Pages

Friday, February 17, 2012

அவன் ...

நிறைவுக்குள் நிறைவாகி
நிறைகின்றாய்
குறைவேதும்  குன்றாமல்
கிடைக்கின்றாய்
தெளிவுக்குள் தெளிவாகி
தெரிகின்றாய்
தெளிவின்றி தவிக்கையிலே
துளிர்க்கின்றாய்
நிஜத்துக்குள்  நிழலாகி
நிற்கின்றாய்
நிழாலாகும்பொழுதில் கூட
நகைக்கின்றாய்

துன்பத்தில் துன்பமாய்
தோன்றுகின்றாய்
துவழ்கின்ற பொழுதெல்லாம்
தோள் தருகின்றாய்
துவண்டழுகின்ற தருணத்தில் கண்ணீர்
துடைக்கின்றாய்
இன்பத்தில் திளைக்க வைத்து
இனிக்கின்றாய்
உன்னை மறக்க வைத்து 
உண்மையை   உணர்த்துகின்றாய்
நல்லதெது தீமையெது
நவில்கின்றாய்

சில சூட்சுமங்கள் வைத்து என்னை
வெல்கின்றாய்...
எண்ணி எண்ணி  உன்னையே
எண்ண(ம்) வைத்தாய்
எவ்விடத்திலும்  உன்
எழிலைக் காண வைத்தாய்
அறிகின்ற  அறிவுக்குள்
அருள்கின்றாய்- அறிய
மறுகின்ற மனத்துக்குள்ளும்
மணக்கின்றாய்........
கடவுள் என்றேன் நான்
சாட்சியில்லை  என்றார் சிலர்
கனிவு என்றேன் நான்
காதலில்லை என்றார் சிலர்
கருணை என்றேன் நான்
காணவில்லை என்றார் சிலர்
காணும்  கண்களின்
காட்சிக்கேற்ப  அருளுகின்றாய் நீ.....





No comments:

Post a Comment