Pages

Saturday, December 13, 2014

கடற்கரை ஓரம்
காலோடு ஈரம்
கதை பேசும் நேரம்
கைகோர்த்துப் போறோம்...........
அந்தி சாயும் நேரம்
சந்தி சிரிக்கும் வானம்
சேரும் இடம் தூரம்......
சேராமல் போறோம்.........
கால் தடம் பாதி
கரை மீது மீதி
கரைவது போல
காணாமல் போறேன்.........
மனதோட பாரம்
காதோட கேட்கும்
என்னோட ஞாயம்
யாருக்குத்தான் கேட்கும்.....????
பலி ஒரு பக்கம்
பாவம் மறுபக்கம்
வலி மட்டும் நிலைக்கும்
வரம் போல கிடைக்கும்............
உள்ள மட்டும் அழுது
ஊருக்குள்ளே சிரிச்சு
எத்தனையோ பேரு
வாழும் இடம் பாரு......
கொட்டி தரும் பணமும்
வட்டியோடு நிஜமா
பெட்டியோடு போன
மண்ணுக்குள்ள வருமா?????

No comments:

Post a Comment