Pages

Monday, April 15, 2013

உன் ஞாபகம்...

என்னை பற்றி
நினைத்துப் பார்க்க
உனக்கு எந்த
ஞாபகங்களும் இருக்காது
ஆனாலும் என்னை
மறந்து விடாதே......
எங்கேனும் சந்திக்க
நேர்ந்தால் பேசாமல்
சென்று விடாதே.....
உன்னை அதிகம் நேசித்தவளாய்
நினைக்க மறுத்தாலும்
உனக்கு வேண்டாதவளாயேனும்
ஞாபகப்படுத்தி பார்.....

உன்னை பற்றிய
ஞாபங்கள் தவிர
என்னிடம் வேறு
எதுமில்லை
எண்ணிப்பார்க்க.......

எங்கோ நீ இருந்தாலும்
என்றோ நீ என்னை மறந்தாலும்
பார்க்கும் ஒவ்வொன்றிலும்
உன்னையே ஞாபகப்படுத்திகொள்கிறேன்
இதை யாரும் அறியா வண்ணம் மறைக்கிறேன்.....

நிலவே இல்லாத வானமாய்
நீ இல்லாத வாழ்வு.......
நினைத்தாலும் வழியாத
கண்ணீராய்
நகைத்தாலும் நகையற்ற
ஓரு முகமாய்........

No comments:

Post a Comment